News Update :
Home » , , , , » மழையில் நனைந்து - Mazhai Tamil Joke

மழையில் நனைந்து - Mazhai Tamil Joke

Penulis : Tamil on Saturday, June 29, 2013 | 1:42 AM


மாலை நேரம். மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவரை பார்க்க நாராயணசாமி சென்றார். அவருடன் வெகு நேரம் பேசினார்.


நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்லை. நண்பர் சொன்னார், ''இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது. இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள். ''நாராயணசாமி ஒப்புக்கொண்டார்.

நாராயணசாமிக்கு சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் நண்பர். பின் திரும்பி வந்து பார்த்தபோது நாராயணசாமியைக் காணவில்லை. சிறிது நேரம் சென்றபின் நாராயணசாமி மழையில் நனைந்து கொண்டே வந்தார்.

''அடடா, மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?'' என்று நண்பர் அவரைக் கேட்டார்.

நாராயணசாமி நிதானமாகச் சொன்னார், ''இன்றிரவு உங்கள் வீட்டில் விருந்து என்பதை என் மனைவியிடம் சொல்லிவிட்டு, அதனால் சமைக்க வேண்டாம் என்று வீட்டிற்குப் போய் சொல்லி வந்தேன்.''
Share this article :

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts

Pages

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger